வங்கிகள் மீது கூட பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது மோடி அரசால்தான்.. மன்மோகன்சிங் தாக்கு
பாஜக அரசின் நடவடிக்கைகளால் மக்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு : மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் மக்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்து இருக்கிறார்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டி காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பெங்களூருவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிகள் மக்களை பெரிதும் பாதித்துள்ளன.
மோடியின் இந்த நடவடிக்கைகளால் மக்கள் வங்கிகளின் மீதான நம்பிக்கையை இழந்து இருக்கிறார்கள். சமீபத்தில் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு இதன் காரணமாகவே ஏற்பட்டது.
அதே போல, நீரவ் மோடி விவகாரத்தில் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் முன்னேற்றத்தை விட, எதிர்க்கட்சிகளை குறை கூறவே மோடி அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications