பணத்தை பறிச்சிட்டு தண்ணியா? கோபத்தில் கொந்தளிக்கும் மக்கள்... #StopDemonetisation
500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கால் வழிக்க இப்படி மோடி நிற்க வைத்து விட்டாரே என்று கூறி வருகின்றனர்.
டெல்லி: நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் மக்கள் ஏடிஎம் வாசலிலும் வங்கி வாசலிலும் நின்று வருகின்றனர். காரணம் பணத்திற்காகத்தான் வீதி வீதியாக எந்த ஏடிஎம் திறந்திருக்கிறது என்றும் எந்த வங்கியில் கூட்டமில்லை என்றும் தேடி அலைந்து வருகின்றனர்.
ரேசன் கடைக்கு போய் லைனின் நிற்காதவர்கள் கூட இப்போது ஏடிஎம் வாசலில், வங்கி வாசலில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றன. எல்லாத்தையும் நிப்பாட்டுங்க. செல்லாத நோட்டு எங்கள் வாழ்க்கைக்கே வேட்டு வைத்து விட்டது என்று புலம்புகின்றனர்.
வங்கி வாசலில் வெயிலில் நிற்பவர்களுக்கு பாஜகவினர் மோர், தண்ணீர் அளித்து வருகின்றனர். அந்த தண்ணீரை கூட வாங்கி குடிக்க மக்கள் தயாராக இல்லை. அந்த அளவிற்கு மத்திய அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர்.
People in Queues rejects BJP volunteers offering water outside banks
— AAP Ka Mehta (@DaaruBaazMehta) November 17, 2016
Such is the anger. #StopDemonetisation pic.twitter.com/wq89NU6KhL
யாருக்கு வேணும் உங்க தண்ணீர். எங்க பணத்தை பறிச்சிட்டு தண்ணீர் கொடுத்தால் சரியாகிவிடுமா என்றும் கேட்கின்றனர்.