For Daily Alerts
Just In
மக்களின் நல்லாசி ஒரு போதும் வீணாகிவிடாது: பிறந்த நாளில் நரேந்திர மோடி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இன்று 64வது பிறந்த நாள். இதையொட்டி முதலில் தமது தயாரிடம் அவர் ஆசி பெற்றார். பின்னர் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமது பிறந்த நாளை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, மக்கள் எனக்கு அளித்திருக்கும் நல்லாசி ஒருபோதும் வீணாகிவிடாது. மக்களின் ஆசிகள் என்னுடைய பணியை வலுப்படுத்தும். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று எனது தாயாரின் ஆசி கிடைத்ததே மிகப் பெரிய பாக்கியம்.
இதே செப்டம்பர் 17-ந் தேதிதான் ஹைதராபாத்தை நிஜாம் மன்னர்களிடம் இருந்து சர்தார் வல்லபாய் படேல் விடுவித்தார். இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றார்.
English summary
Gujarat Chief Minister and Bharatiya Janata Party Prime Ministerial candidate Narendra Modi, who turns 64 on Tuesday, started his day with meeting his mother. He said he has full faith that the blessings of the people for him won't go waste.
Story first published: Tuesday, September 17, 2013, 12:26 [IST]