துண்டாகி கிடந்த தலையுடன் செல்பி.. விமானம் விபத்து நடந்த இடத்தில் மக்கள் செய்த செயல்.. கொடூரம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிஜே மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் பலியாகினர். இந்த விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் துண்டாகி கிடந்த மனித தலையுடன் இளைஞர்கள் போட்டி போட்டு ‛செல்பி' எடுத்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 241 ஆக உள்ளது. தற்போது வரை 200க்கும் அதிகமானவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் தீயில் கருகி உள்ளதால் அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் விமான விபத்து தொடர்பான வீடியோ, விபத்தில் பலியானவர்களின் பின்னணி விவரங்கள் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க தற்போது புதிய வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி பிஜே மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஒருவரின் தலை துண்டாகி உள்ளது. தலை மட்டும் தனியே கிடந்தது. அதனை பார்த்த இளைஞர்கள் அதனை செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்தனர்.
மேலும் சிலர் துண்டாகி கிடந்த தலையின் அருகே நின்று ‛செல்பி' எடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தததில் கரும்புகை மேலெழும்பி வருவதும், அதனை கண்டுக்கொள்ளாமல் இளைஞர்கள் துண்டாகி கிடந்த தலையின் முன்பு நின்று ‛செல்பி' எடுத்ததும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
தலை துண்டாகி கிடந்தவர் யார்? பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த பெரும் துயரிலும் இளைஞர்கள் இறந்தவரின் தலை முன்பு நின்று ‛செல்பி' எடுத்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது. வீடியோவில் இருந்த தலை என்பது பார்க்க கொடூரமாக இருந்தது. இதனால் அந்த போட்டோ, வீடியோவை செய்தியில் காண்பிக்கவில்லை.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications