ராஜ்தாக்கரே மனைவியின் முகத்தை கடித்து குதறிய செல்ல நாய்
மும்பை: மராட்டிய நவநிர்மான் சேன தலைவர் ராஜ் தாக்ரேவின் மனைவி ஷர்மிளாவை அவர்களின் வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த ஷர்மிளாவிற்கு 65 தையல்கள் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மராட்டிய நவநிர்மான் சேன தலைவர் ராஜ் தாக்ரே இவரது மனைவி ஷர்மிளா. இவர்கள் பாண்ட்,ஜேம்ஸ் என்ற இரு நாய்களை வளர்த்து வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 12 மணியளவில் பத்திரிக்கையாளார் சந்திப்புக்கு ராஜ்தாக்கரே தயாராக இருந்துள்ளனர். திடீரென்று பாண்ட் என்கிற நாய் ராஜ் தாக்ரே மனைவியின் முகத்தை சராமாரியாக கடித்தது. அப்போது ஷர்மிளா அலறித்துடித்தார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் பொல பொலவென கொட்டியது. உடனடியாக ஷர்மிளாவை மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 65 தையல்கள் போடப்பட்டது.
நாய் கடித்ததில் ராஜ் தாக்ரே மனைவியின் முக எலும்பு பகுதியில் நாயின் பல் ஆழமாக பதிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ராஜ்தாக்கரே செல்லமாக வளர்த்த வீட்டு நாயே அவரது மனைவியை கடித்து குதறிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.