ஓட்டுப்போடவைக்க என்னவெல்லாம் செய்றாங்க… டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் 50 பைசா தள்ளுபடி
டெல்லி: டெல்லியில் வாக்களிப்பவர்களுக்கு பெட்ரோல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அஜய் பன்சால், டெல்லியில் ஏப்ரல் 10ம்தேதி வாக்குப்பதிவு நடக்கும்போது 67 பெட்ரோல் நிலையங்களில் தள்ளுபடி பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விரலில் மை அடையாளத்தை காட்டினால் லிட்டருக்கு 50 காசுகள் தள்ளுபடி தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஓட்டுப்போட தள்ளுபடி தருவதோடு மட்டுமல்லாது பல்வேறு பிரசார யுக்திகளையும் கையாண்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

சம்பளத்தோடு விடுமுறை
அரசு ஊழியர் முதல் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்தோடு கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டு போட வைக்க
ஒவ்வொரு ஓட்டும் மதிப்பு மிக்கது... ஓட்டுப்போடுவது உங்கள் உரிமை என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.

விற்பனைக்கல்ல…
ஒரு ஒட்டுக்கு ரூ.பத்தாயிரம் வரை தர தயாராக இருக்கின்றன அரசியல் கட்சிகள். ஆனால் என் ஓட்டு விற்பனைக்கல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்துவருகிறது.

டான்ஸ் கூட இருக்கு…
கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தேர்தல் ஆணையமும் தயாராகிவிட்டது. கிராமிய இசைக்கலைஞர்களை வைத்து, பிரசார விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

தலையெழுத்தை மாற்றும்
ஒவ்வொரு ஒட்டும் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் என்பதால் அவசியம் ஓட்டுப்போடுங்க என்கின்றனர் அதிகாரிகள்.

தள்ளுபடியில் பெட்ரோல்
தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் களைகட்டியிருக்க, டெல்லியில் ஓட்டுப் போட்ட விரலின் மை காண்பித்து லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி விலையில் பெட்ரோல் தருகின்றனர்.
நம்ம ஊர்ல இந்த திட்டம் இல்லையா பாஸ்?












Click it and Unblock the Notifications