4வது கட்ட லோக்சபா தேர்தல்: 4 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலின் 4வது கட்டமாக 4 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தல் மொத்தம் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 3 கட்ட வாக்குப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.

4வது கட்ட தேர்தலில் நாளை 4 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கோவா, அசாம், திரிபுரா, சிக்கிம் மாநிலங்களில் இந்த 7 தொகுதிகள் உள்ளன.
கோவாவில் 2 தொகுதிகளில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் பிரதான கட்சிகள்.
திரிபுரா கிழக்கு தொகுதியும் நாளை தேர்தலை எதிர்கொள்கிறது. இங்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் நாளைய தேர்தலில் 74 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.












Click it and Unblock the Notifications