சதானந்தகவுடாவுக்கு நெருக்கமானவர்கள் போனை ஒட்டுக்கேட்ட பெங்களூர் போலீஸ்! பாஜக அதிருப்தி
பெங்களூர்: மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடாவுக்கு நெருக்கமானவர்கள் ஐந்து பேரின் செல்போன் பேச்சுக்கள் பெங்களூர் போலீசாரால் ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய ரயில்வே அமைச்சருமான சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது நடிகை மைத்ரி என்பவர் பெங்களூர் போலீசில் பலாத்கார புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் கார்த்திக்கிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு அந்த நடிகை புகார் அளித்தார்.

போலீசில் ஆஜர்
இதையடுத்து ஆர்.டி.நகர் போலீசார் கார்த்திக் கவுடாவை தேடி வந்தனர். ஆனால் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றபிறகு கார்த்திக் கவுடா போலீசில் ஆஜரானார்.

போன் ஒட்டுக்கேட்பு
தற்போது நிபந்தனை ஜாமீனில் கார்த்திக் கவுடா உள்ளார். இந்நிலையில் சதானந்தகவுடாவின் அரசியல் உதவியாளர் திம்மேகவுடா, சதானந்தகவுடா மனைவியின் உறவுக்காரர் கவுதம், கார்த்திக்கவுடாவின் உறவுக்காரரும், நண்பருமான முரளி, சதானந்தகவுடாவின் தொழில்முறை கூட்டாளி அசோக் பை, சதானந்தகவுடாவின் அண்ணன் பாஸ்கர் கவுடா ஆகிய 5 பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உளவுத்துறை உஷார்
பெங்களூர் காவல்துறை வேவுபார்க்க அனுமதி கேட்டு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தை, மத்திய உளவுத்துறை சேகரித்துள்ளது. இதன்மூலம் சதானந்தகவுடாவுக்கு இந்த விவகாரம் சென்று சேர்ந்துள்ளது.

7 நாட்கள் வேவு
இந்திய தொலைதொடர்பு சட்டப்படி, யார் மீதாவது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டால் முன் அனுமதியின்றி அதிகபட்சம் 7 நாட்கள் வரை அவரது செல்போன் உரையாடல்களை வேவு பார்க்க முடியும். 7 நாட்களுக்கும் மேல் ஒட்டுக்கேட்க வேண்டுமானால், மாநில உள்துறை செயலாளரின் அனுமதி அவசியம். கார்த்திக் கவுடா தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் செப்டம்பர் 5ம்தேதி முதல் 11ம்தேதிவரை பெங்களூர் போலீசார் மேற்கண்டவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டுள்ளனர்.

உள்துறை செயலர் அனுமதி மறுப்பு
7 நாட்கள் ஒட்டு கேட்ட பிறகு, கர்நாடக உள்துறை செயலர் எஸ்.கே.பட்நாயக்கிடம் இதுகுறித்து தெரிவித்து, தொடர்ந்து ஒட்டு கேட்க பெங்களூர் போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பட்நாயக் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பட்நாயக் நிருபர்களிடம் கூறுகையில், யாராவது நிலவு வேண்டும் என்றால் அதை வாங்கி கொடுக்க முடியுமா, ஒருவரிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக அவரை அடித்து மிரட்ட முடியுமா, அதுபோலத்தான் தொலைபேசி ஒட்டுக்கேட்பையும் எடுத்த எடுப்பிலேயே அனுமதிக்க முடியாது. இது ஒருவரின் பர்சனல் விஷயத்தில் தலையிடுவதாகும் என்பதால் நான் அனுமதிக்கவில்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் கிளப்ப பாஜக திட்டம்
இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது பெங்களூர் போலீசாரின் இந்த செயல் பற்றி பிரச்சினை கிளப்ப கர்நாடக பாஜக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் அரசு மத்திய அமைச்சரை அவமரியாதை செய்துவிட்டதாக அம்மாநில பாஜக கருதுகிறது. பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தீவிரவாதிகளின் போனை ஒட்டுக்கேட்பதைப்போல சதானந்தகவுடாவிடம் காவல்துறை நடந்துகொண்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதை அரசியல்ரீதியாக கொண்டு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications