ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கோரி தாக்கல் செய்த மனு வாபஸ்
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவரை உடனடியாகத் தமிழக சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்றும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பி.ஆர். சத்தியநாராயணன் என்ற வழக்கறிஞர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:
ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பால் இரு மாநிலங்களுக்கிடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் இந்தப் பிரச்னையை உணர்ச்சி பூர்வமாக பார்க்கின்றனர்.
இதனால் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அல்லது அவரை உடனடியாகத் தமிழக சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதால் தமது மனுவை வாபஸ் பெறுவதாக சத்யநாராயணா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications