மோடி பாட்டுக் கச்சேரியில் பேசுவார்.. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார்.. ராகுல்காந்தி காட்டம்
பாட்டு கச்சேரியில் பேசும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஏன் பேசுவதில்லை என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதில்லை. மாறாக பாட்டுக் கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதாரண மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், வங்கியில் உள்ள தங்களுடைய பணத்தை எடுக்கவும் பெரும்பாடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே ராஜ்யசபா மற்றும் லோக் சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு பதிலையும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அளித்ததில்லை.
இந்நிலையில், இன்று, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும், பாட்டுக் கச்சேரி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடியால் நாடாளுமன்றத்தில் பேச முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
ரூபாய் நோட்டு விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளதால், தொடர்ந்து லோக் சபாவை நடத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications