மோடி பாட்டுக் கச்சேரியில் பேசுவார்.. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார்.. ராகுல்காந்தி காட்டம்
பாட்டு கச்சேரியில் பேசும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஏன் பேசுவதில்லை என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதில்லை. மாறாக பாட்டுக் கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதாரண மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், வங்கியில் உள்ள தங்களுடைய பணத்தை எடுக்கவும் பெரும்பாடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே ராஜ்யசபா மற்றும் லோக் சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு பதிலையும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அளித்ததில்லை.
இந்நிலையில், இன்று, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும், பாட்டுக் கச்சேரி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடியால் நாடாளுமன்றத்தில் பேச முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
ரூபாய் நோட்டு விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளதால், தொடர்ந்து லோக் சபாவை நடத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications