ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் போனதால் போனிலேயே உரையாற்றிய மோடி!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்தார். ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்காமல் போனதால் அவர் போனிலேயே உரையாற்றினார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் போனது. இதையடுத்து அவர் தனது செல்போன் மூலமாக மக்களிடையேஉரையாற்றினார்.

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

PM Modi addressing in UP through a Phone call!

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வந்தார். ஆனால் கடுமையான பனி மூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இன்றி ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

பைலட் எவ்வளவோ போராடியும் ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து சமயோசிதமாக யோசித்த பிரதமர் மோடி விழா மேடையில் இருந்த பா.ஜ. நிர்வாகிகளுக்கு சூழ்நிலையை புரிய வைத்தார்.

பின்னர் விழா மேடையில் அமர்ந்திருந்த உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் கேசவ் பிரசாத் மயுராவை போனில் தொடர்பு கொண்ட அவர், போன் வாயிலாகவே உரையாற்றினார். பிரதமர் மோடி போனில் உரையாற்றும் போது மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் ஓரம் போன் வைக்கப்பட்டு மோடியின் பேச்சு பொதுமக்களுக்கு கேட்கும் படி செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+