மேற்கு இந்தியத் தீவுகளுக்கு 14 மில்லியன் டாலர் நிதி உதவி.. அள்ளி வழங்கிய மோடி!
Recommended Video
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நேற்று நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்திற்கு நடுவே, கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை (CARICOM) உறுப்பு நாடுகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியையும், சோலார், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கான 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்களையும் வழங்குவதாக மோடி அறிவித்தார்.

கயானாவின் ஜார்ஜ்டவுனில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பிராந்திய மையம் மற்றும் பெலிஸில் உள்ள பிராந்திய தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை அமைப்பதையும் பிரதமர் மோடி அறிவித்தார்.
USA: Prime Minister Narendra Modi attends the India-CARICOM (Caribbean Community and Common Market) leaders' meeting in New York. pic.twitter.com/G8bzSMDyQI
— ANI (@ANI) September 25, 2019
கேரிகாம் என்பது கரீபியனில் அதாவது மேற்கிந்திய தீவுகளில் வளர்ந்து வரும் 20 நாடுகளின் கூட்டமைப்பாகும். அவை பொருளாதார மற்றும் அரசியல் சமூகத்தை உருவாக்குவதற்காகவும், பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதற்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
கூட்டத்தில் கலந்து கொண்ட, மேற்கிந்திய தீவுகளின், தலைவர்களுக்கு அளித்த வரவேற்பு உரையில், பிரதமர் மோடி, பேசுகையில், "இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான உங்கள் ஆர்வத்தை நான் வரவேற்கிறேன். காலநிலை மாற்றம் மற்றும் வறுமை போன்ற இன்றைய சில முக்கிய பிரச்சினைகளுக்கு எதிராக இந்தியா போராடுகிறது.
இன்றைய சந்திப்பு, பரஸ்பர ஒத்துழைப்புடன் நமது இன்றைய தேவைகள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் கேரிகாம் நாடுகளுடன் இந்தியா இணைகிறது. நாம் ஒவ்வொருவரும் இன்று நமது தரப்பிலிருந்து முக்கியமான பரிந்துரைகளை முன்வைப்போம் என்று நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.
கரீபியன் தீவுகள் அமெரிக்க பிராந்தியத்தில் அமைந்துள்ளன. இதில் சில தீவுகள் கரீபியன் கடலால் சூழப்பட்டவை. சில தீவுகள் ஒருபக்கம் கரீபியன் கடலாலும், இன்னொரு பக்கம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலாலும் சூழப்பட்டவை. இந்த தீவுகள், மெக்ஸிகோவின் தென்கிழக்கு வளைகுடா பகுதிகளிலும், மத்திய அமெரிக்காவிலிருந்து கிழக்குப் பகுதியிலும், தெற்கு அமெரிக்காவிலிருந்து வடக்கு பகுதியிலும் அமைந்துள்ளது.
இதில் சுமார் 700 தீவுகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்காவுக்கு மிக அருகாமையில் உள்ள தீவுப்பகுதி இது என்ற போதிலும் கூட, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நிலையில்தான் இவை உள்ளன. இந்த தீவுகளில் கணிசமாக இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். இந்த நிலையில்தான், இந்தியா இந்த நிதி உதவியை, கரீபியன் நாடுகளுக்கு வழங்கி உள்ளது
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications