பள்ளிக் குழந்தைகள் சுட்டுக் கொலை: 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த மோடி வேண்டுகோள்
டெல்லி: பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் தாலிபன்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், 132 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பலியான அக்குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியப் பள்ளிகளில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளி ஒன்றில் நேற்று புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தினர். இதில், 132 மாணவர்கள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தாக்குதல் குறித்து உலகத் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, பள்ளியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தையும், பலியான பள்ளி குழந்தைகளுக்காக இந்தியாவின் இரங்கலையும், வருத்தத்தையும் அவர் தெரிவித்தார்.
பின்னர், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ‘பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான பள்ளி குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று (புதன்கிழமை) 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும்படி' கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர் பாகிஸ்தான் பள்ளியில் பலியான குழந்தைகளுக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications