ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மோடின் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மும்பை: ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பனித்தார்.
பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் 6 ஸ்கார்பியன் வகை நீர் மூழ்கிக்கப்பல்கள் இந்தியாவில் கட்டப்ப்பட்டு வருகின்றன. முழுமையாக கட்டபட்ட 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.

இதில் ஒன்றான ஐ.என்.எஸ். கல்வாரியை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தேசத்துக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பட்நாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரேடாரில் சிக்காத நவீன ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்டது இந்த கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல்.
Mumbai: #INSKalvari, first made-in-India Scorpene class submarine commissioned into the Navy pic.twitter.com/3LtRYHrH9W
— ANI (@ANI) December 14, 2017












Click it and Unblock the Notifications