மோடியின் பென்ஷன் உரையால் அதிருப்தி.. அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க ஓய்வுபெற்ற ராணுவத்தினர் முடிவு
டெல்லி: ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் குறித்த மோடியின் அறிவிப்பில் திருப்தியடையாத முன்னாள் ராணுவ வீரர்கள், அரசின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை, அவர்கள் பணிக்கு சேர்ந்த ஆண்டை கொண்டு வேறுபடுகிறது. சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களைவிட, முன்பே ஓய்வு பெற்றவர்களுக்கு குறைவான பென்ஷன் கிடைக்கிறது.

எனவே, ஒரே மாதிரியான ரேங்கில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும், ஒரே மாதிரியான பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஒரே மாதிரியான பென்ஷன் கேட்டு டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், அதுகுறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சுதந்திர தின உரையில் மோடி கூறியதாவது: "ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் பிரச்சினை, அனைத்து அரசுகள் முன்பாகவும் வந்து கொண்டுள்ளது. சிலர் சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள். ஆனாலும், பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.
ஆனால், எனது அரசு, இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துள்ளது. செங்கோட்டையில், மூவர்ணகொடியின் கீழ் நின்று ராணுவத்தினருக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன்.. நாங்கள் ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம். சில பேச்சுக்கள் மட்டுமே இன்னும் பெண்டிங்கிலுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இருப்பினும் திட்டத்தை அமல்ப்படுத்தும் தேதி உள்ளிட்டவை குறித்த தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால், முன்னாள் ராணுவத்தினருக்கு இது முழு வெற்றியாக அமையவில்லை.
ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் குறித்த மோடியின் அறிவிப்பில் திருப்தியடையாத முன்னாள் ராணுவ வீரர்கள், அரசின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
மோடியின் சுதந்திர தின உரைக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற மேஜர் சத்பிர் சிங் "மோடியின் அறிவிப்பு எங்களுக்கு திருப்திதரவில்லை. ஒரே ரேங்க், ஒரே பென்ஷன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக மோடி கூறியுள்ளார். இது 17 மாதங்கள் முன்பே ஏற்கப்பட்டுவிட்டது. இப்போது செயல்படுத்துவதுதான் பாக்கி. அதுபற்றி மோடி தெரிவிக்கவில்லை.
பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி இனிமேல் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். 1965ம் ஆண்டு அல்லது 1971ம் ஆண்டு போர் வெற்றி விழாவாக இருந்தாலும்கூட நாங்கள் புறக்கணிக்க உள்ளோம்"என்றார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications