செசல்ஸ் தீவின் அதிபருடன் மோடி சந்திப்பு.. ராணுவ தளவாடம் குறித்து ஆலோசனை
செசல்ஸ் தீவின் அதிபர் டென்னி போர்ருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார்.
Recommended Video

டெல்லி: செசல்ஸ் தீவின் அதிபர் டென்னி போர்ருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார்.
இந்திய பெருங்கடல் பகுதியில், மடகாஸ்கர் நாட்டுக்கு அருகே உள்ள செசல்ஸ் தீவு ஆசியாவில் மிக முக்கியமான தீவுகளில் ஒன்றாகும். அளவில் இந்த தீவு சிறிதாக இருந்தாலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சீனாவின் தாக்குதலை சமாளிக்க இந்த தீவு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் இந்த தீவில், ராணுவ தளவாடம் அமைக்க இந்தியா முடிவெடுத்தது. கடந்த பிப்ரவரி மாதமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வகையில், இன்னும் சில மாதங்களில் இதற்கான பணிகள் துவங்க உள்ளது.
இந்திய கடலோர பகுதிகளில் உள்ள சில தீவுகளில் ஏற்கனவே சீனா ராணுவ தளவாடம் அமைத்துள்ளது. அதேபோல், இலங்கையிலும் பெரிய ராணுவ தளவாடம் அமைக்கும் திட்டத்தில் உள்ளது. இதனால் செசல்ஸ் தீவு இந்தியாவிற்கு முக்கியமான தீவாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இன்று செசல்ஸ் தீவின் அதிபர் டென்னி போர்ருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அலுவலகத்தில் சந்தித்தனர். இதில் பாதுகாப்பு குறித்து முக்கிய விவாதம் செய்யப்பட்டது.
ஏற்கனவே காலை டெல்லியில், அவர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். அதன்பின் இந்தியாவின் சில மாநிலங்களை கடந்த இரண்டு நாட்களாக சுற்றிப்பார்த்தார். கடைசியில் இன்று சந்திப்பு நடந்தது. இதில் ராணுவ தளவாடம் அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications