பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடப்பு 2026-ஆம் ஆண்டின் கோடைகால வெப்ப அலையின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச காற்றுத்திறன் மற்றும் வானிலை தரவு அமைப்பான 'aqi.in' வெளியிட்டுள்ள 2026 மே 27 மதியம் 3:49 மணி வரையிலான உலகளாவிய ரியல் டைம் தரவுகளின்படி (Real-Time Data), உலகிலேயே மிக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், தொடர்ச்சியாக முதல் 78 இடங்களை இந்திய நகரங்களே ஆக்கிரமித்துள்ளன என்ற அதிர வைக்கும் உண்மை வெளியாகியுள்ளது.

டாப் 100 நாடுகள்
டாப் 100 உலகளாவிய நகரங்கள் பட்டியலில் 96 நகரங்களில் 96 இந்திய நகரங்கள் உள்ளது. இப்பட்டியலில் 79-வது இடத்தில்தான் வெளிநாட்டு நகரமான ஈரானின் போரஸ்ஜன் (45 டிகிரி செல்சியஸ்) இடம் பிடித்துள்ளது. வட மாநிலங்களில் நிலவும் இந்த அதிரடி வெப்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான சில அவசர ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இந்தியாவின் டாப் 10 ஹாட்டான நகரங்கள்
தற்போதைய ரியல்டைம் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் மிக வெப்பமான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் 49 டிகிரி செல்சியஸ் என்ற உக்கிரமாக வெப்பநிலையுடன் உலகிலேயே வெப்பமயமான நகரம் என்ற பெயரை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாபின் பாதிந்தா, பரீத்கோட், உத்தரப் பிரதேசத்தின் பதேபூர், இடாவா, மிர்சாபூர், பிரயாக்ராஜ், ராஜஸ்தானின் பிகானேர், பரத்பூர் மற்றும் ஒடிசாவின் பலாங்கிர் ஆகிய ஒன்பது நகரங்களும் தலா 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் அடுத்தடுத்த இடங்களில் நிலவி வருகின்றன. இந்த அதீத வெப்ப அலையானது சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
மோடியின் அட்வைஸ்
நாட்டின் தற்போதைய கடுமையான சூழ்நிலையைக் குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிகப்படியான வெயிலினால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.
திடீர் மயக்கம், வாந்தி, அல்லது கடுமையான உடல் சோர்வு மற்றும் தலைவலி போன்றவை ஏற்பட்டால், அது 'ஹீட் எக்ஸ்ட்ராஷன்' எனப்படும் கடுமையான வெப்ப சோர்வின் அறிகுறியாகும்.
இதனை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால், அது உயிருக்கே ஆபத்தான 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதமாக மாறக்கூடும். எனவே, யாரேனும் பலவீனமாக உணர்ந்தால், அவர்களை உடனடியாக குளிர்ந்த நிழலான இடத்திற்கு மாற்றி, போதிய நீர் அல்லது ஓஆர்எஸ் (ORS) கரைசல் வழங்கி முதலுதவி அளிக்க வேண்டும் எனப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள்
இந்தக் கடுமையான வெப்ப அலையின் போது, வீடுகளில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் (Outdoor Workers) ஆகியோர் மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பகல் நேரத்தின் உச்சகட்ட வெயில் நேரத்திலும், மதிய வேளைகளில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வயதான பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களைத் தொலைபேசி மூலம் அவ்வப்போது அழைத்து, அவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கிறார்களா மற்றும் ஓய்வெடுக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவது இந்த நேரத்தில் மிகவும் அவசியமான ஒன்று எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான கோடை காலத்தில் சக மனிதர்கள் மீதும், வாயில்லாப் பிராணிகள் மீதும் காட்டும் சிறு கருணை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் தனது செய்தியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எப்போதும் தேவையான அளவு குடிநீரைக் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல், இந்த கடுமையான கத்திரி வெயிலில் தவிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், நமது வீட்டின் பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும் என்றும், இந்த இக்கட்டான நாட்களை நாம் அனைவரும் மனிதநேயத்துடனும் இரக்கத்துடனும் கடக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications