முடிந்தது டூர்... இந்தியா திரும்பினார் மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து டெல்லி திரும்பியுள்ளார் பிரதமர் மோடி.

சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியாவுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தார் பிரதமர் மோடி. இந்தப் பயணங்களின் போது ஒவ்வொரு நாட்டிலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பல முதலீ்ட்டாளர்களை பிரதமர் ஈர்த்தார்.

PM Modi Lands in Delhi After Six-Day Three-Nation Tour

சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிபருடன் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது ஆலோசனை நடத்திய மோடி, எல்லை கட்டுப்பாட்டு வரையறை செய்வது குறித்தும்பேசினார்.

இந்தப் பயணத்தின் மூலம் மங்கோலியா சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். மேலும், அந்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ஒரு பில்லியன் அமெரிக்கா டாலர் நிதியுதவி செய்யப்படும் எனவும் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் தர தென் கொரியா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு டெல்லி திரும்பினார் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+