பேரிடர் பாதிப்பை குறைக்க 10 அம்ச திட்டம் வெளியிட்டார் பிரதமர் மோடி
இயற்கை பேரிடர் ஏற்படும் காலங்களில் அதனை குறைப்பதற்கான புதிய முயற்சியாக 10 அம்ச திட்டத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
டெல்லி: பேரிடர் காலங்களில் ஏற்படும் இன்னல்களை குறைப்பதற்கான 10-அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி அதில் பெண் தன்னார்வ தொண்டர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், இப்பிரச்னையை களைய சர்வதேச நாடுகள் உரிய ஒத்துழைப்பு நல்கவும் வலியுறுத்தி இருக்கிறார்.
டெல்லியில் ஆசிய பேரிடர் குறைப்பு அமைச்ச மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய அவர், அனைவருக்கும் பேரிடர் இழப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதாவது ஏழை எளிய மக்கள் முதல் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரை பயன் பெற வேண்டும் எனக் கூறினார்.
இயற்கை பேரிடர் காலங்களில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். எனவே, பெண்களுக்கு உதவ அதிக அளவிலான பெண் தன்னார்வலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில; உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.