இந்தியா எனும் பாரதத்தை நோக்கி உலகம்.. இந்தோனேசியா ஆசியான் மாநாட்டில் மோடி முன்வைத்த 12 பரிந்துரைகள்!
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் இந்தியாவுடன் உலக நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான 12 பரிந்துரைகளை முன்வைத்தார்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற 20 வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18 வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில், ஆசியான்-இந்தியா விரிவான திட்டமிடல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் விரிவான விவாதங்களை நடத்தினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மையத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்தார்.
ஆசியான்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த மறுஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். போக்குவரத்து, டிஜிட்டல் மாற்றம், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடு, சமகால சவால்களை எதிர்கொள்வது, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் திட்டமிடல் ஈடுபாட்டை வலுப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியா - ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 12 அம்ச முன்மொழிவை பிரதமர் பின்வருமாறு முன்வைத்தார்:
- தென்கிழக்கு ஆசியா-இந்தியா-மேற்கு ஆசியா-ஐரோப்பாவை இணைக்கும் பன்முக இணைப்பு மற்றும் பொருளாதார வழிதடத்தை நிறுவுதல்
- இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முறைகளை ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
- டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிதி இணைப்பில் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட டிஜிட்டல் எதிர்காலத்திற்கான ஆசியான்-இந்தியா நிதி இதில் அறிவிக்கப்பட்டது
- ஆசியான் மற்றும் கிழக்காசியாவின் பொருளாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நமது ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான அறிவுசார் கூட்டாளியாக செயல்படுவதற்கான ஆதரவை புதுப்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.
- உலக அளவில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பல்வேறு மட்டத்தில் கூட்டாக எழுப்ப அழைப்பு
- இந்தியாவில் உலக சுகாதார நிறுவனத்தால் நிறுவப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தில் சேர ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு
- சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, அமைப்பில் இணைந்து பணியாற்ற அழைப்பு
- மக்கள் மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு மலிவு மற்றும் தரமான மருந்துகளை வழங்குவதில் இந்தியாவின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது
- தீவிரவாதம், தீவிரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் இணையத்தில் தவறான தகவல்களுக்கு எதிராக கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு
- பேரழிவைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் சேர ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு
- பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைக்க அழைப்பு
- கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் கள விழிப்புணர்வு ஆகியவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு அழைப்பு
கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த இரண்டு கூட்டு அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்தியா மற்றும் ஆசியான் தலைவர்களைத் தவிர, கிழக்கு தைமூர் பிரதிநிதி இந்த உச்சிமாநாட்டில் பார்வையாளராக பங்கேற்றார்.
18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில், கிழக்காசிய உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, அதை மேலும் வலுப்படுத்துவதற்கான நமது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆசியான் மையத்திற்கான இந்தியாவின் ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக்கை உறுதி செய்ய அழைப்பு விடுத்தார்.
இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வைகளின் ஒருங்கிணைப்பை எடுத்துரைத்த பிரதமர், குவாடின் தொலைநோக்குப் பார்வையின் மையப்புள்ளி ஆசியான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தீவிரவாதம், பருவநிலை மாற்றம் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான நெகிழ்வான விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு அணுகுமுறைக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சூரிய கூட்டமைப்பு, மத்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, ஒரே சூரியன் ஒரே உலகம் ஒரே கட்டமைப்பு போன்ற நமது நாட்டின் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்! -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்












Click it and Unblock the Notifications