Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசாவை பாஜகவிடம் 5 வருஷம் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. நரேந்திர மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள மோடி அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்தை (பிஜேடி) கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் ஒடிசாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜகவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை பொறுத்த அளவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் vs பாஜக vs காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

PM Modi requested voters to give Odisha to BJP for 5 years

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. பாஜகவும் 21 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை பொறுத்த அளவில், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இதே தேதியில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

எனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இன்று பெஹ்ராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அவர் பேசியதாவது, "ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி காலாவதி ஆகப்போகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4ஆம் பிஜேடி காலாவதி ஆகிவிடும். ஒடிசாவை பாஜக நிச்சயம் நெ.1 மாநிலமாக மாற்றுவோம். அதற்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒடிசாவுக்கு ஒடியா மொழியையும், அதன் கலாச்சாரத்தையும் புரிந்துக்கொள்ளும் முதலமைச்சர் தேவை. அப்படியான முதலமைச்சர்தான் இம்மக்களின் பிரச்னைகளை புரிந்துக்கொண்டு விரைவான தீர்வை உருவாக்குவார்.

அந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜூன் 10ம் தேதி நடைபெறும் பாஜகவின் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு உங்களை அழைக்க நான் இங்கு வந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக ஒடிசாவில் செயல்படாமல் வைக்கப்பட்டிருந்த பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை பாஜக அன்று முதல் செயல்படுத்த தொடங்கும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மூத்த குடிமக்களையும் இறைவன் ஜெகநாதர் கவனித்துக்கொள்வார்.

ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.6000 தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், பிஜேடி அரசு இந்த திட்டத்தை நிறுத்தியிருக்கிறது. ஜல் ஜீவன் மிஷனுக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி அனுப்பியது. அந்த பணத்தை இங்குள்ள அரசால் செலவிட முடியவில்லை. சாலைகள் அமைப்பதற்கு பணம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்னமும் இங்கு சாலைகள் மோசமான நிலையில்தான் இருக்கின்றன.

காங்கிரஸுக்கு 50 ஆண்டுகளும், பிஜேடிக்கு 25 ஆண்டுகளும் கொடுத்திருக்கிறீர்கள். பாஜகவுக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள். ஒடிசாவை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம்" என கூறியுள்ளர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+