பிரதமரான பிறகு முதல் முறையாக சென்னை வருகிறார் நரேந்திர மோடி!
பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வரும் ஜூன் 29-ம் தேதி சென்னைக்கு வருகிறார் நரேந்திர மோடி. இதற்காக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
29-ந் தேதி பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படும் மோடி, மாலை 3.30 மணிக்கு தனி விமானத்தில் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.
அங்கு அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

மாலை 3.45 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு ஸ்ரீஹரிகோட்டாவிலேயே தங்குகிறார்.
ஸ்ரீஹரிகோட்டா
30-ந் தேதி (திங்கட்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் காலை 9.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.
பின்னர் விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் டெல்லிக்கு வழியனுப்பி வைக்கப்படுகிறார். காலை 11.15 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
5 அடுக்கு பாதுகாப்பு
நரேந்திரமோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் சென்னை வந்துள்ளனர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications