ஒரு நாளைக்கு 1.62 கோடி ரூபாய்.. பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு ஆகும் செலவு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு 1.62 கோடி ரூபாய் செலவு ஆவது தெரியவந்துள்ளது.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கடந்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டப்படி எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை( கருப்பு பூனைப்படை) இனி பிரதமர் பதவியில் உள்ளவர்களுக்கு (பிரதமர் மோடிக்கு) மட்டும் தான் அளிக்கப்படும். மற்றவர்களுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த எம்பி தயாநிதி மாறன் லோக்சபாவில் எஸ்பிஜி பாதுகாப்பு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தற்போது உள்ள வீரர்களின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு காரணம்
இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷான் ரெட்டி பதில் அளித்தார். அவர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்து பேசுகையில் எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமரை மட்டுமே பாதுகாக்கிறது, பாதுகாப்பு காரணங்களுக்காக எத்தனை பாதுகாவலர்கள் என்ற விவரங்களை வெளியிட முடியாது. இதேபோல் விஐபிக்களை பாதுகாக்கும் சிஆர்பிஎப் வீரர்களின் விவரம் குறித்தும் பாதுகாப்பு காரணங்களுக்கான வெளியிட முடியாது என்றார். எனினும் சிஆர்பிஎப் வீரர்கள் நாட்டில் 56 முக்கிய விஐபிக்களை பாதுகாக்கிறார்கள் என்றார்.

10 சதவீதம் அதிகம்
2020-21 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், சிறப்பு கமாண்டோக்கள் 3,000 பேர் கொண்ட எஸ்பிஜிக்கு செய்யப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் தயாநிதி மாறன் எழுப்பிய இந்த கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. உயரடுக்கு எஸ்பிஜி படைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 592.55 கோடியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளார். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10 சதவீதம் அதிகம் ஆகும்.

சோனியாகாந்தி குடும்பம்
கடந்த ஆண்டு எஸ்பிஜி சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர், நான்கு விஐபிகளின் பாதுகாப்பிற்கு உயரடுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு பொறுப்பு வகித்தது. அதாவது பிரதமர் மோடி மட்டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குழந்தைகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா. ஆகிய நான்கு பேருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மோடிக்கு மட்டும் 592 கோடி
இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டில் நான்கு விஐபிக்களை பாதுகாக்க எஸ்பிஜிக்கு பட்ஜெட்டில் 540.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி ஒரு தனிநபரை பாதுகாக்க ஆகும் செலவு ரூ .135 கோடி, அதாவது பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி உள்ளடக்கிய நான்கு விஐபிகளைப் பாதுகாப்பதற்கான சராசரி செலவு தலா ரூ .135 கோடி. ஆனால் இப்போது ரூ. 592.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடிக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு என்பதால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 340 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது தினமும் பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்புக்கு 1.62 கோடி ரூபாய் செலவு ஆகும்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications