வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்களை தூண்டிவிடுகிறது காங்.: மோடி குற்றச்சாட்டு
Recommended Video
தன்பாத்: குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பொய்யான தகவல்களை தெரிவித்து போராட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாஜக மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

திட்டமிட்டு கிடப்பில் போட்ட காங்.
ராமர் கோவில் பிரச்சனையை திட்டமிட்டே காங்கிரஸ் பல ஆண்டுகாலம் கிடப்பில் போட்டியிருந்தது. நாங்கள் ஒருபோதும் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படுவது இல்லை.

கண்டுகொள்ளாத காங்கிரஸ்
நாட்டின் வளர்ச்சிக்காகவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் கடினமான முடிவுகளை எடுக்காது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை 50 ஆண்டுகளாக கிட்டப்பில் போட்டிருந்தது காங்கிரஸ்.

குடியுரிமை மசோதா
வாஜ்பாய் தலைமையிலான அரசுதான் ஜார்க்கண்ட் தனி மாநிலத்தை உருவாக்கியது. குடியுரிமை மசோதா குறித்து நாட்டு மக்களிடம் தவறான தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது.

தூண்டிவிடும் எதிர்க்கட்சிகள்
அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள்தான் போராட்டங்களை தூண்டி வருகின்றன. வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளில் நாம் ஒருபோதும் கை வைக்கமாட்டோம்.

மத்திய அரசு உறுதி
வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை உறுதியாக பாதுகாக்கப்படும். அப்பகுதிகளின் வளர்ச்சிக்காகவே மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications