வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்களை தூண்டிவிடுகிறது காங்.: மோடி குற்றச்சாட்டு
Recommended Video
தன்பாத்: குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பொய்யான தகவல்களை தெரிவித்து போராட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாஜக மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

திட்டமிட்டு கிடப்பில் போட்ட காங்.
ராமர் கோவில் பிரச்சனையை திட்டமிட்டே காங்கிரஸ் பல ஆண்டுகாலம் கிடப்பில் போட்டியிருந்தது. நாங்கள் ஒருபோதும் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படுவது இல்லை.

கண்டுகொள்ளாத காங்கிரஸ்
நாட்டின் வளர்ச்சிக்காகவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் கடினமான முடிவுகளை எடுக்காது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை 50 ஆண்டுகளாக கிட்டப்பில் போட்டிருந்தது காங்கிரஸ்.

குடியுரிமை மசோதா
வாஜ்பாய் தலைமையிலான அரசுதான் ஜார்க்கண்ட் தனி மாநிலத்தை உருவாக்கியது. குடியுரிமை மசோதா குறித்து நாட்டு மக்களிடம் தவறான தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது.

தூண்டிவிடும் எதிர்க்கட்சிகள்
அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள்தான் போராட்டங்களை தூண்டி வருகின்றன. வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளில் நாம் ஒருபோதும் கை வைக்கமாட்டோம்.

மத்திய அரசு உறுதி
வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை உறுதியாக பாதுகாக்கப்படும். அப்பகுதிகளின் வளர்ச்சிக்காகவே மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications