மே. வங்கத்தில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டாலே சிறையில் அடைக்கிறார் மமதா... மோடி 'அட்டாக்'

Subscribe to Oneindia Tamil

தம்லுக்: மேற்கு வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டாலே முதல்வர் மமதா பானர்ஜி சிறையில் அடைத்துவிடுகிறார் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் தம்லுக் என்ற இடத்தில நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

மேற்கு வங்க வாக்காளர்கள் வாரிசு அரசியலுக்கும் இடதுசாரிகளுக்கும் வாய்ப்பு அளித்தீர்கள். வளர்ச்சியை விரும்பும் எங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்.

PM Modi slams WB CM Mamata Banerjee

முதல்வர் மமதா பானர்ஜிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட போது மமதா பானர்ஜியை 2 முறை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட விரும்பினேன். ஆனால் மமதா பானர்ஜி, நான் தொடர்பு கொண்டதை மதிக்கவில்லை. மக்கள் நலனை விரும்பாத ஆணவம் பிடித்தவர் மமதா பானர்ஜி.

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை அண்மையில் ஐ.நா. சர்வதேச தீவிரவாதி என அறிவித்தது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி. இந்த விவகாரம் குறித்து இதுவரை மமதா பானர்ஜி எதுவும் பேசவில்லையே ஏன்?

இம்மாநிலத்தில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டாலே சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடுகிறது. மமதாவின் வாக்கு வங்கி அரசியலுக்கு இந்த தேர்தலில் பாடம் கிடைக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+