பீட்சா ஒரே ருசிதான்... ஆனால் தமிழ்நாட்டில் தயாராகும் இட்லி பலவிதமான சுவை கொண்டது - மோடி
டெல்லி: டெல்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி தமிழ்நாட்டு இட்லியை பீட்சாவோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
'மை கவ்' ஆப் 2வது ஆண்டுவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடந்த விழாவில பிரதமர் மோடி பங்கேற்றார். மோடியை நேரடியாக மக்கள் தொடர்பு கொள்வதற்காக 'மை கவர்மென்ட்' என்ற ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஆப்சை தொடர்ந்து பயன்படுத்தும் மக்கள், மோடியை நேரடியாக சந்தித்து தங்களின் கருத்தை தெரிவிப்பதற்காகவும், பிரதமருடன் ஆலோசனை நடத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது பேசிய மோடி, பசு பாதுகாப்பு தொழில் செய்வோர் என்னை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளனர். சிலர் இரவு நேரங்களில் இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கடைகளை திறந்துள்ளனர்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் கடைகளை நடத்துபவர்கள் குறித்து ஆவணங்களை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பசுக்கள் கொல்லப்படுவதால் சாவதில்லை. பசுக்கள் இயற்கை மாசுபாடுகளால் உயிரிழக்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை உண்பதால் பலியாகின்றன. இந்த பசு பாதுகாப்பு அமைப்புகள் பிளாஸ்டிக் பொருட்களை தெருவில் வீச வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தால் அதுவே மிகப்பெரிய சேவை என கூறினார்.
மேலும், உணவு குறித்தும் அதன் பாதுகாப்பு மற்றும் தொழில்வளம் குறித்து மோடி பேசும் போது தமிழ்நாட்டு இட்லியை அமெரிக்காவில் உள்ள பீட்சாவோடு ஒப்பிட்டு பேசினார்.
Pizza Hutல் தயாராகும் பீட்சா ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் கூட ஒரே ருசியுடன் தான் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் தயாராகும் இட்லி பலவிதமான சுவைகளுடன் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய உணவு வகைகளை நல்ல முறையில் தயாரித்து அதனை சிறந்த முறையில் சந்தையில் விற்றால் இந்தியாவை பார்த்து உலகமே வியக்கும் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் மோடி கூறினார்.
வி்சேஷம் என்னவென்றால் மேற்கு இந்தியாவிலிருந்து வந்தவரான மோடி காலையில் தினசரி சாப்பிடுவது தென்னிந்திய உணவு வகைகளாம். அதாவது இட்லி, தோசை போன்றவற்றைத்தான் காலையில் விரும்பிச் சாப்பிடுகிறாராம் மோடி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications