ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்வு: பிரதமர் மோடி வாழ்த்து
ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி: ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ரஷியாவில் 18-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாதிமிர் புதின் (65), 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்க களம் இறங்கினார்.

அதற்கு முன்பு அவர் 2 முறை பிரதமராக இருந்தார். பிரதமர் பதவியில் இரண்டு முறைக்கு மேல் இருக்கக்கூடாது என்பதற்காக அதிபா் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
76 சதவீத வாக்குகள் பெற்று புதின் அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்தியா- ரஷ்யா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வருகை தருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications