தாயை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி.. ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பாச பிணைப்பு!
அகமதாபாத்: குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது வீட்டிற்கு சென்று தாயாரை சந்தித்து ஆசிபெற்றுவந்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான
குஜராத் சென்றுள்ளார். விமான நிலையத்திலிருந்து தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சூறாவளிப் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற உற்சாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க குஜராத் சென்றுள்ளார்.

குஜராத் தேர்தல்
இந்தியாவில் அடுத்து தேர்தலை சந்திக்கவிருக்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். அதற்கான பிரசாரத்தை இப்போதே மோடி தொடங்கிவிட்டதாக தெரிகிறது. உத்தரப்பிரதேச தேர்தலுக்கு முன்னதாகவே, காசி சென்று தரிசனம் செய்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பிரசாரத்தை தொடங்கினார். அதைப்போலவே குஜராத்திலும் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

பாஜக
குஜராத் பாஜக எம்.எல்.ஏ -க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பிறகு பாஜக தலைமையகத்தில் ஓய்வெடுத்தார். 3 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ள குஜராத் பஞ்சாயத்து ராஜின் மகா சம்மேளன கூட்டத்தில் இன்று மாலை அவர் உரையாற்றினார். அத்துடன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

தாயுடன் சந்திப்பு
அதன்பிறகு காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அப்போது தாயார் காலில் விழுந்து ஆசிபெற்றார் பிரதமர் மோடி. இருவரும் சிலமணி நேரங்கள் மனம்விட்டுப் பேசினார்கள். இதையடுத்து, மோடி தனது தாயுடன் இரவு உணவு அருந்தினார்.

ஹீராபென்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காந்தி நகரில் வசித்து வருகிறார். பிரதமர் மோடு குஜராத் வரும்போதெல்லாம், தவறாமல் தனது தாயை சந்தித்து ஆசி பெற்றுச் செல்வார். டெல்லியில் மோடி இருந்தாலும், தாய்க்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கவனித்துக்கொள்கிறார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications