Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென மெட்ரோவில் ஏறி.. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த பிரதமர் மோடி.. புனேவில் சுவாரசிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

புனே: பிரதமர் நரேந்திர மோடி புனேவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். அதன்பின் அவர் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியபடி பயணம் செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வானஸ்-கார்வார், பிசிஎம்சி-புகிவாடி இடையே புதிதாக மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.11,400 கோடி மதிப்பிட்டில் திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்துக்கு 2016ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் துவங்கப்பட்டு சுறுசுறுப்பாக நடந்தது.

மோடி துவக்கி வைப்பு

மோடி துவக்கி வைப்பு

இந்நிலையில் கார்வார் கல்லூரி முதல் ஆனந்த் நகர் வரையிலான 12 கிலோமீட்டர் மெட்ரோ பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இன்று பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயில் இயக்கத்தை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 கலந்துரையாடல்

கலந்துரையாடல்

இதையடுத்து அவர் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் பயணித்தார். அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், ‛‛புனே மெட்ரோவில் இளம் நண்பர்களுடன் பயணம் செய்தேன்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனந்த் நகரில் மெட்ரோவி் இருந்து இறங்கியவுடன் அங்குள்ள புத்தகத்தில் பயண அனுபவம் குறித்து எழுதினார்.

குறித்த காலத்தில்...

குறித்த காலத்தில்...

அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ‛‛இந்த திட்டத்துக்கு நான் அடிக்கல் நாட்டினேன். இப்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். குறித்த காலத்துக்குள் பணிகள் முடிக்க வேண்டும். பல ஆண்டுகளாக நாட்டில் திட்டங்கள் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை மந்தப்படுத்திவிடும். இன்று இந்தியாவில் திட்டங்கள் வேகமாகவும், கவனமாகவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது" என்றார்.

சத்ரபதி சிவாஜி சிலை

சத்ரபதி சிவாஜி சிலை

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கேசியாரி, துணை முதல்வர் அஜித் பவார், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நகர மேம்பாட்டு துறை அமைச்சர் எக்நாத் சிண்டே உள்பட பலர் இருந்தனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி புனே மாநகராட்சி அலுவலகத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+