சிபிஐ அமைப்பை மத்திய அரசு பாதுகாக்கும்: பிரதமர் மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று சிபிஐ அதிகாரிகள் இடையே பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சிபிஐ 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. நாட்டின் சிக்கலான பல வழக்குகளை சிபிஐ விசாரித்திருக்கிறது.
அண்மையில் சிபிஐ அமைப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சிபிஐயின் சட்டப்பூர்வதன்மையை காப்பாற்றியது.
ஊழலைப் பற்றி பகிரங்கமாக விவாதிக்கிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஊழலுக்கு வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
சிபிஐ வழக்குகளில் ரகசியம் மிகவும் முக்கியமானது. முக்கிய வழக்குகளில் நேரடி ஒளிபரப்புபோல ஊடகங்களில் செய்திகள் கசியவிடக் கூடாது. அதேபோல் சிபிஐ வழக்கு விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையும் அவசியம் என்றார்.












Click it and Unblock the Notifications