தமிழக தொழிலாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் – நீதிவிசாரணை கேட்டு 13ல் பாமக போராட்டம்
ஹைதராபாத்: ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணை கோரி 13ஆம் தேதி பா.ம.க போராட்டம் நடக்க இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கட்டிட வேலைக்கு சென்ற அப்பாவி தமிழர்கள் 20 பேரை அம்மாநிலக் காவல்துறையினர் கடத்திச் சென்று காட்டில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஆந்திரக் காவல்துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கம் ஏற்க முடியாததாகும். இதுகுறித்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றமும் காவல்துறையின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.
அப்பாவித் தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதால் இதுகுறித்த உண்மைகளை ஆந்திரக் காவல்துறை மூடி மறைக்கவே முயலும். எனவே, இந்த படுகொலைகளின் பின்னணியில் ஒளிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் இதுகுறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரணை நடத்துவதே சரியானதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இருமாநில அரசுகளும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications