ஆதிரா டிவி சீரியல் நடிகை ஸ்ரீ வாணி மீது வரதட்சணை புகார்
ஹைதராபாத்: ஆதிரா சீரியல் ஹீரோயின் ஸ்ரீ வாணி மீது அவரது அண்ணி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானவை சேர்ந்த ஸ்ரீவாணி கொடவ,ப்ரேமா போன்ற சிரியல்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு தொலைக்காட்சி உலகின் முக்கியமான தொகுப்பாளினியாக இருக்கிறார். இவர் சன்டிவியில் ஒளிபரப்பான ஆதிரா என்ற பேய் சீரியலில் நடித்தார். இவர் மீது இவரது அண்ணி அனுஷா வரதட்சனை புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீவாணியின் அண்ணன் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய அண்ணன் மரணத்திற்கு அண்ணியே காரணம் என ஸ்ரீவாணி கருதுவதாகவும், அதனால் அவருடைய அண்ணியை அவர் வீட்டை வீட்டு வெளியேற்ற முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது .
இதனிடையே இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீவாணி, இது பொய்யான புகார் என்றும் அண்ணனின் மரணத்திற்கு பிறகு சொத்துப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் சொத்துக்களை சம பங்காகவே தனது தந்தை பிரித்து கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வரதட்சணை புகார் குறித்து போலீசார் ஸ்ரீவாணிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications