Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஏஏ போராட்டம்.. பொது சொத்து சேதமானால் இழப்பீடு தரணும்! அசாம் எதிர்க்கட்சிகளுக்கு போலீஸ் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

திஸ்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அசாம் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான தொகை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என அம்மாநில போலீசார் நோட்டீஸ் விடுத்திருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) மசோதாவாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கான சட்ட விதிகள் கடந்த ஆண்டு வரை இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு சட்டவிதிகள் இறுதி செய்யப்படாததால் இந்த சட்டம் செயலற்று கிடந்தது.

Police notice to opposition parties who announced protest against CAA in Assam

ஆனால், சமீபத்தில் இதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் சட்டம் அமலாக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் கடந்த 2014ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சமடைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, பார்சி, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் ஜெயின் போன்ற மதத்தினை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால், இதில் இலங்கை தமிழர்கள் குறித்தோ அல்லது இஸ்லாமியர்கள் குறித்தோ எவ்விதமான உறுதி மொழியும் கொடுக்கப்படவில்லை. இதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து 2009ம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்திருக்கின்றனர்.

இவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சிஏஏ சட்டத்தில் இது குறித்து எதுவும் பேசப்படாமல் இருப்பது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதேபோல, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகள் குறித்தும் இந்த சட்டம் எதுவும் பேசவில்லை. எனவே இது பாரபட்சமான சட்டம் என்றும், இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கும் சட்டம் என்றும் அம்மதத்தை சேர்ந்த மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீவிரமான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இன்று அம்மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு எதிராக அம்மாநில காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அதாவது போராட்டத்தில் பொது சொத்துக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+