Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியரசு தின விழாவில் பயங்கரம்.. ஏகே 47 துப்பாக்கியால் சுட்டு போலீஸ்கராரர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவின்போது ஏகே 47 துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீஸ்காரர் ஒருவர்.

லூதியானா மாவட்டம் ஜாகரன் நகரில் உள்ள அரசு சீனியர் செகன்டரி பள்ளி மைதானத்தில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. அப்போதுதான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. தற்கொலை செய்து கொண்ட காவலரின் பெயர் மஞ்சித் சிங். 44 வயதான இவர், ஜாகரன் சிட்டி போலீஸ் நிலைய அதிகாரியின் தனிப்பட்ட காவலராக இருந்து வந்தார்.

Policeman shoots himself with his AK-47 gun in Ludhiana

குடும்பப் பிரச்சினை காரணமாக இவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று குடியரசு தின விழாவின்போது திடீரென தனது ஏகே 47 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தால் குடியரசு தின விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+