மோடியை பிடிக்கும்.. மோடிக்கு தான் என்னை பிடிக்காது… ராகுல் சொல்கிறார்
Recommended Video
புனே: அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் உரையாடிய ராகுல்காந்தி, சிறு வயதில் இருந்தே பல வன்முறை சம்பவங்களை பார்த்துள்ளதாகவும், வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சில்வர் குடத்திலிருந்து பூவை கொட்டிய கீதா ஜீவன்.. வெட்க சிரிப்புடன் பூ மழையில் நனைந்த கனிமொழி!
மேலும், தனக்கு மோடியை பிடிக்கும் என கூறியுள்ள ராகுல் காந்தி , அவருக்குத் தான் தன்னை பிடிக்காது என்றும் பதிலளித்தார். பணமதிப்பிழப்பு ஒரு மோசமான நடவடிக்கை என்பதை எந்த ஒரு பொருளாதார நிபுணரும் ஒப்புக்கொள்வார் என்று கூறிய அவர், அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உண்மையை ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொள்வதாகவும், அனுபவத்தில் இருந்தே தமது துணிச்சல் பிறப்பதாகவும் அவர் கூறினார். பொய்களை நம்பி பொய்களை சொல்லிக் கொண்டு திரிந்தால் அச்சம்தான் ஏற்படும் என்றும் ராகுல்காந்தி பேசினார்.
5 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படும் என்றும், அதை எப்படி செயல்படுத்துவது என்பது வரை ஆலோசித்திருப்பதாகவும் கூறிய ராகுல் காந்தி, வெற்று அறிவிப்புகளை எப்பொழுதும் கொடுப்பதில்லை என்றும் கூறினார்.
பாலக்கோட் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய பெருமை இந்திய விமாப்படையையே சாரும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதி ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் வரும் 11-ம் தேதி சோனியா காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.