டெல்லியில் தேர்தல் நடைபெற்றால் ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை பெறும்: கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றால் ஆம் ஆத்மி கட்சிதான் பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக ஆம் ஆத்மி வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆம் ஆத்மிக்கே பெரும்பான்மை

ஆம் ஆத்மிக்கே பெரும்பான்மை

டெல்லியில் சிவோட்டர் நிறுவனம் 1038 பேரிடம் இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது. இக்கருத்துக் கணிப்பில் 43% பேர் ஆம் ஆத்மி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளனர்.

பாஜகவுக்கு ஆதரவு குறைவு

பாஜகவுக்கு ஆதரவு குறைவு

பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று 37% பேர் கூறியுள்ளனர்.

தேர்தல் நடத்த வேண்டும்

தேர்தல் நடத்த வேண்டும்

அத்துடன் டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதை டெல்லிவாசிகள் பெரும்பான்மையோர் விரும்பவில்லை. புதியதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று 90% பேர் கூறியுள்ளனர்.

ஆம் ஆத்மி- காங். கூட்டணி அரசு

ஆம் ஆத்மி- காங். கூட்டணி அரசு

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைய 39% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதர கட்சிகள் கூட்டணி அமைய 32% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கிரண்பேடிக்கு அமோகம்

கிரண்பேடிக்கு அமோகம்

பாரதிய ஜனதா கட்சியில் ஹர்ஷவர்தனுக்குத்தான் தொடர்ந்தும் அதிக பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 34.8% பேர் அவர் முதல்வராக ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் பாஜகவில் கிரண்பேடி இணைந்தால் அவர் முதல்வராவதற்கு 65% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கெஜ்ரிவால்தான் பெஸ்ட்

கெஜ்ரிவால்தான் பெஸ்ட்

மேலும் சிறந்த முதல்வராக யார் இருப்பார் என்ற கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 34.4% பேரும், ஹர்ஷவர்த்தனுக்கு 17.1% பேரும்தான் ஆதரவு அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+