ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு!
குர்கான்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறுமா அல்லது 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஹரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. ஹரியானா அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து 3ஆவது முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன.

மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெறும் 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹரியானா சட்டசபை தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம் - பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.
அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். 462 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
ஹரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள் மற்றும் 467 மூன்றாம் பாலின வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடந்தது.
ஹரியானா மாநிலம் முழுவதும் மொத்தம் 29,462 போலீசார், 21,196 ஊர்க்காவல் படையினர் மற்றும் 10,403 சிறப்பு காவல் அதிகாரிகள் (எஸ்பிஓ) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். குடிமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் கடுமையான கண்காணிப்பு பராமரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மாலை இரு மாநிலங்களுக்குமான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
2019 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 90 இடங்களில் 40 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஜேஜேபி மற்றும் ஏழு சுயேச்சை எம்எல்ஏக்களுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் பாஜக ஆட்சி அமைத்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜேஜேபியின் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
மனோகர் லால் கட்டார் இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். பின்னர் ஜேஜேபி கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன் பிறகு சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார் பாஜகவின் நயாப் சிங் சைனி. விவசாயிகள், பாஜக அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டங்கள் ஆகியவை ஹரியானாவில் பாஜகவுக்கு எதிராகச் செயல்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஹரியானா சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி, 36.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேவாட் தொகுதியில் அதிகபட்சமாக 42.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications