மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்
போபால்: மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள 230 இடங்களில் 2,583 பேர் போட்டியிடுகின்றனர். 4.65 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இதே போன்று 40 இடங்களைக் கொண்ட மிசோரமில் 142 பேர் போட்டியிடுகின்றனர். மிசோரமில் மொத்தம் 6.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

மிசோரமில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஜோரம் தேசியவாத கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.,
மத்திய பிரதேசத்தில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதியும், மிசோரத்தில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 9ம் தேதியும் எண்ணப்படுகின்றன.
தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications