சபரிமலை ஐயப்பன் கோயிலில் குலுங்கி அழுதபடி சாமி கும்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்
Recommended Video
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று கண்ணீர் சிந்தி குலுங்கி அழுதபடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
இருமுடி கட்டி கார்களில் சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, யதீஷ் சந்திரா என்ற ஐபிஎஸ் அதிகாரி மரியாதைக்குறைவாக நடத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில், கடும் கெடுபிடிகளுக்கு பிறகு, அரசு பஸ் மூலமாக சபரிமலை சன்னிதானத்திற்குள், பொன்.ராதாகிருஷ்ணன், அனுப்பி வைக்கப்பட்டார். சாமி தரிசனம் செய்தபோது, பொன்.ராதாகிருஷ்ணன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டத்தில் குலுங்கியபடி அழுதுகொண்டே சாமி தரிசனம் செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
இந்த வீடியோ பொன்.ராதாகிருஷ்ணனின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
Had darshan #Ayyappan today, with so much of emotion. #SaveSabarimalaTradition @santhoshbjp @BJP4Keralam @BJP4India @AmitShah @PMOIndia pic.twitter.com/GLeo3lNfGq
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) November 21, 2018