அவதூறு வழக்கு போடுவேன், ஜாக்கிரதை: மீடியாவை மிரட்டும் நடிகை பூஜா மிஸ்ரா
மும்பை: மாடலும், நடிகையுமான பூஜா மிஸ்ரா தான் ஹோட்டல் ஊழியரை தாக்கிய செய்தியை வெளியிட்ட மீடியாவை மிரட்டியுள்ளார்.
மாடலும், நடிகையுமான பூஜா மிஸ்ராவுக்கு சர்ச்சையில் சிக்குவது அல்லது சர்ச்சையை கிளப்புவதே வேலையாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தாஜ் த்வாரகா ஹோட்டலில் தங்கிய அவர் தனது அறையில் உடைக்கப்பட்ட பொருட்களுக்கு பணத்தை தர மறுத்து ஹோட்டல் ஊழியரை தாக்கினார்.
இதை யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் பூஜா பதிலுக்கு ஒரு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
என் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை வெளியிட்ட அனைத்து செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வழக்கு த்வாரகா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
A video msg to all who are enquiring about the viral video... Eat this!
Posted by Pooja Misrra on Monday, September 14, 2015
அப்படி இருக்கையில் அது குறித்த வீடியோவை வெளியிடுவதால் நான் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தால் நீங்கள் ரூ.1,000 கோடி செலுத்த வேண்டி இருக்கும். அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் கோழைகள் என்று தெரிவித்துள்ளார்.