ரசகுல்லாவுக்கு 150வது ஹேப்பி பர்த்டே.. மே.வங்க அரசு தந்த ஸ்பெஷல் பரிசு!

ரசகுல்லா கண்டுபிடிக்கப்பட்டு 150 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா : ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு ரசகுல்லா. நாடு முழுவதும் இதன் சுவைக்கு பிரியர்கள் அதிகம். இந்த இனிப்பை கொல்கத்தாவின் பக்பசாரைச் சேர்ந்த நோபின் சந்திரதாஸ் என்பர் கடந்த 1868ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

postal dept to honour its rosogolla inventor with stamp

ரசகுல்லாவிற்கு ஒடிசாவும், மேற்கு வங்காளமும் உரிமை கோரியது. பின்னர் சட்டரீதியாக இந்தப் போராட்டத்தில் மேற்கு வங்காளம் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. பக்பசாரில் நடைபெற்ற ரசகுல்லா திருவிழாவில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம், நோபின் சந்திரதாசின் பேரன் திமான் தாஸ், கொல்கத்தா தபால் நிலைய அதிகாரி சாருகேஷி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+