ஜெ.க்கு அஞ்சலி செலுத்த சரக்கு விமானத்தில் வந்தாராம் பிரணாப்.. வதந்தி கிளப்பிய நெட்டிசன்கள்
டெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக, ராஜாஜி அரங்கத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாலை 4 மணியளவில் வருகை தந்தார். முன்னதாக, டெல்லியிலிருந்து ஜனாதிபதி சென்னை நோக்கி தனி விமானத்தில் கிளம்பியபோது, விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து,விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விமானத்தின் பழுது சரி செய்யப்பட்டு பிறகு மீண்டும் விமானம் சென்னை கிளம்பியது. சென்னைக்கு வருகை தந்த பிரணாப், விமானத்திலிருந்து இறங்கியதும், சாலை மார்க்கமாக ராஜாஜி ஹால் வருவதை தவிர்த்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்றார்.
#PresidentMukherjee landed in Chennai this evening & paid his last respects to Selvi Jayalalitha,President will return to Delhi immediately pic.twitter.com/jlQDYqLc4w
— President of India (@RashtrapatiBhvn) December 6, 2016
ராஜாஜி ஹால் அருகே ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய பிரணாப் முகர்ஜி, அங்கிருந்து சென்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனால், டெல்லியிலிருந்தே சரக்கு விமானத்தில் உடலை குறுக்கி கொண்டு ஜனாதிபதி சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறி தவறான தகவல் சமூக தளங்களில் பரவி வருகிறது.
குடியரசு தலைவரின் டிவிட்டர் கணக்கில், ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பறக்கும் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் நெட்டிசன்கள் தப்பாக நினைத்துவிட்டார்கள் போலும்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications