நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு- காதலன் ராகுலின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
மும்பை: மும்பையில் பிரபல டி.டி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலன் ராகுலின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலனும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான ராகுல் கொடுத்த சித்ரவதை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மும்பை கோர்ட்டில் ராகுல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி குவாஜா பாரூக் அகமது முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, ராகுல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எனவே அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications