காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப நேரு தயங்கவில்லை- மூத்த பத்திரிகையாளர் விளக்கம்
டெல்லி: 1948-ல் காஷ்மீருக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப முன்னாள் பிரதமர் நேரு தயங்கினார் என்ற பாஜக மூத்த தலைவர் அத்வானியின் குற்றச்சாட்டை மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜா மறுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சாம் மானக்ஷா, மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜாவுக்கு கடந்த 1993ஆம் ஆண்டு அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி அத்வானி தனது ப்ளாக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், 1948இல் காஷ்மீரை பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பழங்குடியினர் நெருங்க முற்பட்டனர். அப்போது அங்கு இந்திய ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்ப நேரு தயங்கினார். எனினும், சர்தார் வல்லபபாய் படேல்தான் ராணுவத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தார் என்று அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சாம் மானக்ஷா தமக்கு அளித்த அந்த பேட்டியில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜா நேற்று விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அத்வானி தமது ப்ளாக்கில் மானக்ஷா எனக்கு அளித்த பேட்டியை சிறிதும் மாற்றாமல் அப்படியே வெளியிட்டுள்ளார். காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பும் விவகாரத்தில் நேருவுக்கும் பயடேலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தது என்று முடிவாக அவர் கருத்து கூறியுள்ளதும் உண்மைதான்.
ஆனால், அதுவே முழு உண்மையாகி விடாது. ஏனெனில், காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பலாமா? வேண்டாமா? என்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எப்போது, எந்தச் சூழ்நிலையில் அனுப்பப்பட வேண்டும் என்பதிலேயே அவர்கள் முரண்பட்ட கருத்தைக் கொண்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் பிரேம் சங்கர் ஜா கூறியுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications