விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பச்சைப் புடவையில் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த்!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மண் சோறு சாப்பிட்ட விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் மண்சோறு சாப்பிட்டார்.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 29வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டம் நடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளின்றி நாடு செழிக்காது
அப்போது விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் மண்சோறு சாப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் இன்றி நாடு செழிக்க முடியாது என்றார்.

எடப்பாடி இதுவரை சந்திக்கவில்லை
டெல்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் இதுவரை நேரில் சந்திக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

சாலைகள் போன்று நதிகளையும்..
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாக கூறி பிரேமலதா, நீர்நிலைகளை தூர்வார இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்தது போன்று தேசிய நதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பச்சை நிறப்புடவையில்..
மேலும் தேமுதிக எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் பிரேமலதா தெரிவித்தார். விவசாயிகளின் அடையாள நிறமான பச்சை நிற புடவையில் பிரேமலதா விஜயகாந்த் போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications