விசாகப்பட்டினம் கடலில் போர் கப்பல்கள் கம்பீர அணிவகுப்பு: பிரணாப் முகர்ஜி, மோடி பார்வையிட்டனர்
விசாகப்பட்டினம்: சர்வதேச கடற்படை விழாவை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் 70 போர்க் கப்பல்கள் வரிசை வரியாக அணிவகுத்து நின்றதை குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியும், பிரதமர் நரேந்திரமோடியும் இன்று பார்வையிட்டனர். அவர்களுக்கு முப்படை வீரர்களும் மரியாதை அளித்தனர்.
ஆந்திர மாநில விசாகப் பட்டினத்தில் 'ஐ.எப்.ஆர்.2016' என்ற பெயரில் சர்வதேச கடற்படை விழா 4 நாள் நடக்கிறது. ஆளுநர் நரசிம்மன் நேற்று விழாவை தொடங்கி வைத்தார்.
இரண்டாவது நாளான இன்று கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. மேலும் நடுக்கடலில் போர்க் கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாகூர், முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு 70 போர்க் கப்பல்கள் 6 வரிசையாக அணிவகுத்து நின்றன.பிரணாப்முகர்ஜியும், நரேந்திரமோடியும் ஐ.என்.எஸ். சுமத்ரா என்ற கப்பலில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டனர். அவர்களுக்கு முப்படை வீரர்களும் மரியாதை அளித்தனர். பின்னர் நடுக்கடலில் நடத்த முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை அவர்கள் பார்வையிட்டனர்.
விழா நடைபெறும் 3 நாட்களும் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஹைதராபாத்தில் தங்கி இருப்பார் என கூறப்படுகிறது.
7ந்தேதி நகர கவாத் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம்தேதி போர்க்கப்பல்கள் பாசறை திரும்புகிறது.












Click it and Unblock the Notifications