இன்னும் 2 மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கிளம்பி விடுவேன் - பிரணாப் சூசகம்!
இன்னும் 2 மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கிளம்பி விடுவேன் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இன்னும் 2 மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கிளம்பி விடுவேன் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதன் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியில்லை என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியொன்றில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரையாற்றினார். அப்போது இன்னும் 2 மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கிளம்பிவிடுவேன் என அவர் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரே நபர் குடியரசுத் தலைவராக இரண்டுமுறை போட்டியிட்டு பதவி வகிக்கலாம். ஆனால் முதல் முறை பதவி வகித்துள்ள பிரணாப் முகர்ஜி, மீண்டும் போட்டியிடப் போவதில்லை என சூசகமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications