சாய்னா நெய்வால், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்
டெல்லி: பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திருபாய் அம்பானி, சாய்னா நெய்வால், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விபூஷன் , பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தின்போது 112 பேருக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் 5 பேருக்கு பத்மவிபூஷன் விருதும், 8 பேருக்கு பத்மபூஷன் விருதும், 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த திருபாய் அம்பானி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், பிரபல நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி,ஆகியோருக்கு பத்மவிபூசன் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

திருபாய் அம்பானி
மறைந்த திருபாய் அம்பானிக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதினை திருபாய் அம்பானி சார்பில் கோகிலா அம்பானி பெற்றுக் கொண்டார்.

சாய்னா நெய்வால்
சிஏஜியின் முன்னாள் தலைவர் வினோத் ராய், பாட்மிட்டன் வீராங்களை சாய்னா நெய்வால், நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட 8 பேருக்கு பத்ம பூசன் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

மயில்சாமி அண்ணாதுரை
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அஜய் பால் சிங், திரைப்பட இயக்குனர் மதூர் பண்டார்கரு, இசைக்கலைஞர் பண்டிட் துளசிதாஸ் பார்க்கரு, மற்றும் மருத்துவ நிபுணர் பிரவீண் சந்திராவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மயில்சாமி அண்ணாதுரை
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அஜய் பால் சிங், திரைப்பட இயக்குனர் மதூர் பண்டார்கரு, இசைக்கலைஞர் பண்டிட் துளசிதாஸ் பார்க்கரு, மற்றும் மருத்துவ நிபுணர் பிரவீண் சந்திராவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அஜய் தேவ்கான்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், அஜாய்குமார் தத்தா, டாக்டர் அல்லா கோபால கிருஷண கோகலே, ஓவியர் கலால் லக்மா கவுடு, கண்சிகிச்சை நிபுணர் மகிபதி ஜோஷி, தாமல் கண்டலை சீனிவாசன், அறுவை சிகிச்சை நிபுணர் ரவிகாந்த் ஆகியோருக்கு பத்ம விருதுகளை பிரனாப் முகர்ஜி வழங்கினார்.

தீபிகா குமாரி
வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சிவ்நாராயணன் குரீல், ஸ்ரீநரேஷ் சந்தர் லாலு, இலக்கிய துறையில் சிறந்த சேவை ஆற்றிய மாலிக், கிருஷ்ணமணி, மகேஷ் சந்திர மேத்தா ஆகியோருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ வருதுகளை வழங்கினார்.

ரஜினிக்கு அடுத்த மாதம்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா உள்பட எஞ்சிய 56 பேருக்கு, அடுத்த மாதம் நடக்கும் விழாவின் போது பத்ம விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications