காப்பீட்டு துறையில் 49% அன்னிய முதலீடு.. சர்ச்சைக்குரிய அரசாணைக்கு ஜனாதிபதி ஒப்புதல்
டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதம் வரை அதிகரிப்பது மற்றும் நிலக்கரிச் சுரங்க ஏல முறையில் திருத்தம் உள்ளிட்ட 2 அரசாணைகளுக்கு அனுமதி அளித்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில், காப்பீடு துறை மசோதா மற்றும் நிலக்கரி சுரங்க ஏல முறை திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இரு அவைகளிலும் இந்த இரண்டு மசோதாக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு எழுந்ததால் கூட்டத் தொடரில் நிறைவேற வில்லை.

இந்நிலையில், கூட்டத்தொடர் முடிந்த அடுத்த நாளே மத்திய அமைச்சரவை கூடி இரு மசோதாக்களையும் அரசாணை மூலம் நடைமுறைக்கு கொண்டுவர முடிவெடுத்தது.
இதையடுத்து இந்த அரசாணை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு அனுமதி வழங்கும் வகையில் பிரணாப் முகர்ஜி, இன்று, கையெழுத்திட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு சட்டதிருத்தப்படி, இத்துறையில் இனிமேல் 49 சதவீதம் அளவுக்கு அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி கிடைக்கும். தற்போது இது 26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன்மூலம் காப்பீடு துறைக்கு 6 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு முதலீடு ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அரசாணைக்கு ஒப்புதல் வழங்கியிருந்தாலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications