அருணாச்சல பிரதேசத்தில் அதிசயம்.. உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதை! பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இட்டாநகர்: இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்துள்ளார்.
நேற்று அசாம் மாநிலத்திற்கு சென்ற மோடி, இன்று காலை யுனெஸ்கோ புகழ் பெற்ற காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்திற்கு யானை சவாரி செய்தார். அங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், மான்கள், வித்தியாசமான பறவைகள் ஆகியவற்றை கண்டு வியந்த அவர், இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளால் இந்த இடம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இதனையடுத்து ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் 'லச்சித் போர்புகானின்' 84 அடி உயர சிலையை திறந்து வைத்தார். பின்னர் போதாரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், காணொலி வாயிலாக புதிதாக கட்டப்பட்டுள்ள டின்சுகியா மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். மேலும் சிவசாகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற மோடி, அங்கு நடைபெற்ற 'விக்சித் பாரத்; விக்சித் வடகிழக்கு' நிகழ்ச்சியில், பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்திருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கை இணைக்கும் இது 'சேலா' சுரங்கப்பாதை என்று அழைக்கப்படுகிறது.
இந்த சுரங்கப்பாதைக்கு மோடி கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். தற்போது இது ரூ. 825 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய பொறியியல் கட்டுமானத்தில் சாதனையாக கருதப்படும் இந்த சுரங்கப்பாதை, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாலிபாரா-சாரிடுவார்-தவாங் சாலையில் உள்ள சேலா கணவாயை தவாங்குடன் இணைக்கிறது.
முன்னதாக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார், "கடந்த 5 ஆண்டுகளில் பாஜக என்ன செய்ததோ, அதை செய்ய காங்கிரஸ் 20 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும். அவர்கள் வடகிழக்கு மாநிலங்களின் எல்லைகளை புறக்கணித்தனர். அங்குள்ள கிராமங்களை அவர்கள் கடைசி கிராமம் என்று அழைத்தனர். ஆனால் எங்களை பொறுத்த அளவில் இதுதான் முதல் கிராமம்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் ரூ.10,000 கோடி மதிப்பிலான விண்வெளி பயணம் தெடர்பாக UNNATI திட்டத்தையும் , மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கான ரூ.55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications